போலீஸ் கைது என்பது மிகவும் பயமுறுத்தும் அனுபவம். ஆனால் இந்திய சட்டம் கைதுசெய்யப்பட்ட ஒவ்வொருவருக்கும் வலுவான உரிமைகளை வழங்கியுள்ளது. இந்த உரிமைகளை தெரிந்துகொண்டால் நீங்கள் சட்டரீதியாக தன்னை பாதுகாத்துக்கொள்ளலாம்.
கைதுசெய்யப்பட்டவுடன் உங்கள் உரிமைகள்:
- ஏன் கைது செய்கிறோம் என்று தெரிந்துகொள்ளும் உரிமை: BNSS Section 47 படி கைது காரணம் கட்டாயம் சொல்லவேண்டும்.
- வழக்கறிஞரை சந்திக்கும் உரிமை: கைதுசெய்யப்பட்ட உடனே வழக்கறிஞரை அழைக்கலாம் — இது அரசியலமைப்பு உரிமை.
- குடும்பத்தினருக்கு தெரிவிக்கும் உரிமை: உங்களை கைது செய்த விஷயம் உங்கள் குடும்பத்தினருக்கு உடனடியாக தெரிவிக்கப்படவேண்டும்.
- 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவேண்டும்: 24 மணி நேரத்திற்கு மேல் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் வைத்திருக்க முடியாது.
- மருத்துவ பரிசோதனை உரிமை: கைது செய்யப்பட்டவர் மருத்துவ பரிசோதனை கேட்கலாம்.
உடனடியாக என்ன செய்ய வேண்டும்:
- அமைதியாக இருங்கள். போலீஸிடம் வாதிட வேண்டாம்.
- உடனடியாக வழக்கறிஞரை அழைக்கவும் அல்லது குடும்பத்தினரை அழைக்கும்படி கேளுங்கள்.
- எந்த ஆவணத்திலும் படிக்காமல் கையெழுத்து போடாதீர்கள்.
- நீங்கள் என்ன சொன்னாலும் நீதிமன்றத்தில் எதிராக பயன்படுத்தப்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
Bail எடுப்பது எப்படி:
- Bailable Offence என்றால் போலீஸ் Station லேயே Bail கிடைக்கும்.
- Non-Bailable Offence என்றால் நீதிமன்றத்தில் Bail Petition தாக்கல் செய்ய வேண்டும்.
- உடனடியாக அனுபவமிக்க கிரிமினல் வழக்கறிஞரை அணுகுங்கள்.
📞 இப்போதே ஆலோசனை பெறுங்கள்: Adv. B. Sivasubramanian — +91 97104 21215